அநாகரிகமாக நடந்த பிக்கு! கஞ்சா பக்கற்றுக்களுடன் கைது

Mayoorikka
4 years ago
அநாகரிகமாக நடந்த பிக்கு! கஞ்சா பக்கற்றுக்களுடன் கைது

மதுபோதையில் அநாகரிகமாக  நடந்துகொண்ட பிக்கு ஒருவர் நேற்று (11) அதிகாலை கைதுசெய்யப்பட்டார் என, நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் பிக்குவை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் பிக்குவிடமிருந்து கஞ்சா பக்கட் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிக்கு உள்ளிட்டவர்கள் பயணித்த காரை பொலிஸார் சோதனையிட்ட போது, காருக்குள்ளிருந்தும் மற்றுமொரு கஞ்சா பக்கட், மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பிக்குவும் சாரதியும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4