கொழும்பில் கைக்குண்டு மீட்பு-பிரதான சந்தேகநபர் அடையாளம்!

#SriLanka #Colombo
Nila
4 years ago
கொழும்பில் கைக்குண்டு மீட்பு-பிரதான சந்தேகநபர் அடையாளம்!

கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் அமைந்துள்ள பொரள்ளை தேவாலயம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, 3 பேர் கைது நேற்று செய்யப்பட்டனர்.

அதனையடுத்து, சந்தேகநபர்கள் தற்போது கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4