கொழும்பில் அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா!

#SriLanka
Nila
4 years ago
கொழும்பில் அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா!

கொழும்பில் Duke வீதியில் உள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் 17 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், குறித்த வங்கியின் தகவல் துறையின் கூடுதல் பொது மேலாளர், ஊழியர்களுக்கு பிசிஆர் சோதனைகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும், தங்கள் வேலையைத் தொடருமாறும் அறிவுறுத்தினார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனை செய்தனர் எனவும், இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் சங்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4