அரிசி விலையில் மாற்றம்! 200 ரூபா வரை அதிகரிப்பு!

Mayoorikka
2 years ago
அரிசி விலையில் மாற்றம்! 200 ரூபா வரை அதிகரிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாவை அண்மித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை நேற்றைய சந்தை நிலவரப்படி, 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 200 ரூபாவை எட்டும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 105 ரூபாவிற்கு குறைவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 130 ரூபாவிற்கு குறைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்