வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம் குறித்து வெளியான தகவல்

Prabha Praneetha
2 years ago
வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம் குறித்து வெளியான தகவல்

வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா வீதியில் கரையொதுங்கியிருந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட சடலம், தனது சகோதரர் என அருவ்வல, பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் உறுதிப்படுத்தியதாக வெள்ளவத்தை பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

54 வயதுடைய டி.பி. பியல் ஜயவர்தன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்த தனது சகோதரர் நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தமையினால் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்