வாகனங்களின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Prabha Praneetha
2 years ago
வாகனங்களின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 

இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டிற்கு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த அளவிற்கு விலைகள் உயர்ந்துள்ளன.

வாகனங்களின் விலை உயர்ந்த நிலையில் வாகன விற்பனைகள் பாரியளவு குறைந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்