இலங்கையில் 24 மணித்தியாலமும் மின்சாரம் தடைப்படலாம்! கை விரித்தது மின்சார சபை!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் 24 மணித்தியாலமும் மின்சாரம் தடைப்படலாம்! கை விரித்தது மின்சார சபை!

மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வைக் காண முடியாமல் இருப்பதே இந்த நிலைக்குக் காரணம் என மின்சார சபையின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. மழையும் இல்லாத காலநிலை ஒன்றே இந்த வருடம் ஆரம்பம் முதல் காணப்படுகின்றது.

இதனால் மின்சாரம் போதுமான அளவு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாத நிலைமை சமாளிக்க முடியாது. கடந்த காலங்களில் கொரோனாத் தொற்று பரவலினால் நாடு மூடப்பட்டதைப் போன்று மின்சாரம் இல்லாத காரணத்திற்காக நாடு மூடப்படும்.

எரிவாயு, பால் மா வரிசை போன்று மின்சார தடைக்கும் ஏதாவது ஒரு வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை எதிர்வரும் நாட்களில் ஏற்படும்.

நாட்டில் இந்த நாட்களிலும் ஏற்படும் மின் தடை தொடர்பில் அதிகாரிகள் தெரிவித்துவரும் கருத்துக்கள் முரண்பாடானவை என செயலாளர் ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்