உரப் போர்க்களத்தின் நடுவில் நானும் ஜனாதிபதியும் தனித்து விடப்பட்டோம்: மஹிந்தானந்த 

Prathees
2 years ago
உரப் போர்க்களத்தின் நடுவில் நானும் ஜனாதிபதியும் தனித்து விடப்பட்டோம்: மஹிந்தானந்த 

தானும் ஜனாதிபதியும் உரக்கப் போராட்டக் களத்தின் நடுப்பகுதிக்கு சென்ற போது அனைவரும் தப்பிச் சென்றதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

50 வருடங்களாக இந்நாட்டில் வேரூன்றியிருந்த பாரிய இரசாயன உரப் போதையில் இருந்து நாட்டை விடுவித்து அந்த மாபெரும் மாபியாவுடன் மோதுவது பெரும் சவாலாகும்.

அதைத் தெரிந்துதான் இந்த வேலையைத் தொடங்கினேன். அப்படியானால் அப்படி மோதுவது என்பது தனித்துச் செய்யக்கூடிய காரியம் அல்ல.

இது விடுதலைப்புலிகளுடனான மோதலுக்குப்பின்னர் இடம்பெறும் பாரிய மோதல், 

எனவேஇ எமது ஏனைய அனைத்துப் படைகளையும் இந்தப் போருக்குத் தயார்படுத்திக் கொண்டு நாம் இந்தப் போர்க்களத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.

எனினும் நான் போர்க்களத்தில் இறங்கி நடுப்பகுதிக்கு சென்ற போது ஜனாதிபதியும் நானும் மட்டுமே இருந்தோம். வேறு எந்தப் படையணியும் எங்களைப் பின்தொடரவில்லை. இறுதியில் ஜனாதிபதியும் நானும் மட்டும் போர்க்களத்தில் இருந்தோம்.

இதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. ஒரு நாள் கூட சந்திக்கவில்லை.

 இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியில் வந்து தாக்கியது. அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தக் கொள்கையால் அதிகப் பயனடையும்.

ஆனால்இ இந்த திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் விமர்சித்தார்.

 இந்த திட்டத்தின் சுகாதார முக்கியத்துவத்தை கூற சுகாதார அமைச்சகம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை.

இதற்கு எமது அமைச்சின் பெரும்பாலான அதிகாரிகள் ஆதரவளிக்கவில்லை.

இந்த திட்டத்தை எடுக்க விரும்பியவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் அவ்வாறு செய்தனர். அதற்கு காரணங்கள் உண்டு.

இந்த திட்டத்தை சிலர் போலியாக உருவாக்கி அதில் அரசியல் மீன் பிடித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்