தம்புள்ளையில் பீட்ரூட் கடத்தல்

Prathees
2 years ago
தம்புள்ளையில் பீட்ரூட் கடத்தல்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீட்ரூட் கையிருப்பு பல நாட்களாக கடத்தப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த பீட்ரூட் தொகை  நுவரெலியா பிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள பல கடைகளில் தந்திரமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ உள்ளூர் பீட்ரூட் ரூ.320 முதல் 350 வரை அதிக விலைக்கு விற்கப்படும் இந்த நேரத்தில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பீட்ரூட் சுமார் ரூ.220 முதல் 280 வரை விற்பனையாகிறது.

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்துடன்  மறைத்து கொண்டு வந்திருக்க வேண்டும்.இது எப்படி இலங்கைக்குள் நுழைந்தது என்பதையும் கண்டறிய வேண்டும்.அதுதான் பிரச்னை என தம்புள்ளை பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்