சீரடி சாய்பாபா பாடல் ”வரவேண்டும் நீயே...”
வரவேண்டும் நீயே சாயி பாபா
வரம்வேண்டினோமே சாயி பாபா
தரவேண்டும் நீயே சாயி பாபா
(ஹரே ராம ராமா சாயி ராமா(2)
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா சாயி கிருஷ்ணா(2) )
குறையேதும் இல்லா சாயி நாதா
குழல் ஊதும் கண்ணா சாயி நாதா
பரந்தாமன் நீயே சாயிநாதா
பணிந்தோமே உன்னை சாயி நாதா(ஹரே ராம)
அறியாமை போக்கும் சாயி பாபா
அடியாரை காக்கும் சாயி பாபா
புரியாத புதிரே சாயி பாபா
புனலாகும் அறிவே சாயி பாபா(ஹரே ராம)
எளியோனாய் வந்த சாயி நாதா
இருள் போக்கும் சுடரே சாயி நாதா
தெளிவான நதியே சாயி நாதா
தினம் போற்றினோமே சாயி நாதா(ஹரே ராம)
பிணியாவும் தீர்க்கும் சாயி பாபா
பிழையாவும் நீக்கும் சாயி பாபா
கனிவோடு பார்க்கும் சாயி பாபா
கருணா கரனே சாயி பாபா (ஹரே)
பரபிரம்மம் நீயே சாயி நாதா
பரம் பொருள் ஆனாய் சாயி நாதா
அருளான் நீயே சாயி நாதா
அடையாத கதவே சாயி நாதா(ஹரே)
மழை மேகம் நீயே சாயி பாபா
மலர் தோட்டம் நீயே சாயி பாபா
அழைத்தோமே உன்னை சாயி பாபா
அணையாத விளக்கே சாயி பாபா(ஹரே)
நிழலாக தொடரும் சாயி நாதா
நிலையான நதியே சாயி நாதா
வழங்காயோ அருளே சாயி நாதா
வணங்காதோர் உண்டோ சாயி நாதா(ஹரே)
மேலும் ஆன்மீக தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.