மத்திய அதிவேக வீதியில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி
Prasu
2 years ago
புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான வீதியில் நாளை நண்பகல் வரையில் வாகனங்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இத்தருணம் முதல் நாளை நண்பகல் 12 மணிவரை குறித்த வீதியை கட்டணம் இன்றி பயன்படுத்த அனுமதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.