4000 போதை மாத்திரைகளுடன் நெதர்லாந்திலிருந்து இலங்கை வந்த பொதி
Prabha Praneetha
2 years ago
நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 4000 போதை மாத்திரைகளை உள்ளடக்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதை மாத்திரைகளை தபால் திணைக்களத்திற்கு கைமாற்றும் போது சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.