களு கங்கையில் மூழ்கி இருவர் பலி: 10 வயது சிறுவன் மாயம் 

Prathees
4 years ago
களு கங்கையில் மூழ்கி இருவர் பலி: 10 வயது சிறுவன் மாயம் 

சிறிபாகம ஸ்ரீ பலபத்தல பிரதேசத்தில் களு கங்கையில் குளித்துக் கொண்டிருந்த நால்வர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த குழுவினர் நேற்று (15) பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குருவதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் 10 வயதுடைய சிறுவனே காணாமல் போயுள்ளார்.

உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4