வெள்ளவத்தையில் 7வது மாடியிலிருந்து  குதித்த நபருக்கு நேர்ந்த கதி

Prathees
2 years ago
வெள்ளவத்தையில் 7வது மாடியிலிருந்து  குதித்த நபருக்கு நேர்ந்த கதி

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7வது மாடியில் இருந்து குதித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பு 06 இல் வசிக்கும் 87 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.