ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கிளியைக் காணவில்லை: தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு

Prathees
2 years ago
ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கிளியைக் காணவில்லை: தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த நீலக்கழுத்துக்கிளியைக் காணவில்லை என  மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த கிளியின் பெறுமதி ஒன்றரை லட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிளியை 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் திகதியிலிருந்து காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மே 8, 2021 தொடக்க வாரத்தில் நீலக் கிளி கூட்டை எடுத்துக்கொண்ட ஊழியரால்  நீலக் கிளி குறைவாக இருப்பதாக விலங்கு பராமரிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அலுவலக டைரியில் ஒரு குறிப்பை வைத்து, இது குறித்து நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.