இலங்கையின் முன்னேற்றத்தில் பொறியாளர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது
பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட முன்னாள் மாணவர் சங்கத்தின் (PEFAA) கொழும்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட PERA Engineers Day – Pinnacle 2026 நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டது தனக்கு மகிழ்ச்சியளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பொறியியல் துறையின் ஒற்றுமை, தொழில்முறை சிறப்பு மற்றும் பொறியாளர்களின் சிறப்பான பங்களிப்புகளைப் போற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்றது பெருமைக்குரிய அனுபவமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அன்பான அழைப்பையும், மனமார்ந்த வரவேற்பையும் வழங்கிய PEFAA கொழும்பு கிளைக்கு தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களுடனும், பொறியியல் மற்றும் புதுமைகளின் ஊடாக இலங்கையின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் தொழில்முறை நிபுணர்களுடனும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பெரும் கௌரவமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, PEFAA கொழும்பு கிளையின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே