ஜயம்பதி பண்டார 10 வழக்குகளில் இருந்து விடுதலை
Prathees
2 years ago
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இலட்சக்கணக்கான ரூபாவை அபகரித்த 10 குற்றச்சாட்டுகளில் இருந்து அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேக நபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தொடரப்படாது, திரும்பப் பெறப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராகிய உதவி பணிப்பாளர் நாயகம் சமர்பித்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.