போதைப் பொருட்களை அழிக்க வெகுவிரைவில் புதிய சட்டம்

Prabha Praneetha
4 years ago
 போதைப் பொருட்களை அழிக்க வெகுவிரைவில் புதிய சட்டம்

கைப்பற்றப்படும் சட்டவிரோத போதைப் பொருட்களில் விசாரணைக்கான ஒரு தொகையை மாத்திரம் வைத்துவிட்டு ஏனையவைகளை மஜிஸ்திரேட் முன்னிலையில் உடனடியாகை அழிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதனால் அவை மறுசீரமைக்கப்பட்டு வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பான சட்ட மறுசீரமைப்பு மற்றும் சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அவற்றைப் பார்வையிட சென்ற வேளையிலேயே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, மீன்பிடிக்கும் பாணியில் போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என்று மீனவர்களிடம் வேண்டுகோள் விடுத்த பாதுகாப்புச் செயலாளர் அவ்வாறனவர்கள் சட்டத்திற்கு முன்கொண்டுச் செல்லப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4