இங்கிலாந்தில் 60 எலும்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட 2 மாத குழந்தை

Keerthi
2 years ago
இங்கிலாந்தில் 60 எலும்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட  2 மாத குழந்தை

பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்யும் மனிதர்கள் மிருக வர்க்கத்தில் வந்தவர்கள் என்பதை தமது இழிவான செயல்களில் நிரூபிப்பதை
மேலைத்தேய நாடுகளில் காண்பது துரதிஷ்டமானதே.

இங்கிலாந்தில்  2 மாத குழந்தை 60 எலும்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாயும் (24) தந்தையும் (26) குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ள செய்தி, குழந்தை செல்வங்களை நேசிக்கும் மானிட வர்க்கத்தை கடுமையாக உலுப்பியுள்ளது .

பிள்ளை, மூச்சு பேச்சற்ற நிலையில் அவசர சிகிச்சை பிரிவினரை அழைத்தது மட்டுமல்ல, பொலிஸ் விசாரணையில் அவர்களின் செயல்பாடுகளே குழந்தை இறந்ததற்கு காரணம் எனக் கூறிய இவ்வகை தாய் தந்தையரை எவ்வகையான கொடிய பிரிவிற்குள் சேர்ப்பது?

பச்சிளம் குழந்தை ( அமினா ) என்ன பாவம் செய்தது ? அல்லது என்ன தவறு செய்தது ?....அந்த உயிரை வதைக்கும் வண்ணம்  41 முறிவுகள் விலாவிலும் 
24 முறிவுகள்  மூட்டு பகுதிகளிலும் ஏற்படக்கூடிய வகையில் அந்த உயிரை பறிப்பதற்கு ?

அறிவற்ற காதலும், உண்மையற்ற ஒன்று சேர்தலும், வாழத் தெரியாத பக்குவமும் இவ்வகையான கொடிய செயல்களை செய்து விட்டு , பின்பு 
மன நோய் என்றும் மனக்கோளாறு என்றும் வாதிடும் போக்கை கொண்டுள்ளனர்.