சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு.!!!

Keerthi
2 years ago
சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம். பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு.!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸின் சுகாதார துறை அமைச்சரான, ரோமுலோ புயத் தெரிவித்திருப்பதாவது, சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த மாதம் பத்தாம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். சுற்றுலா பயணிகள் இதற்கு முன்பு இரண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலோ, பயணத்திற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலோ அரசு மையங்களில் கட்டாய தனிமைப்படுத்துதல் கிடையாது. அவர்கள் நேரடியாக நாட்டிற்குள் செல்லலாம் என்று கூறியிருக்கிறார்.