ஸ்ரீதரனின் நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லை. கூட்டமைப்புக்குள்ளே விரிசல். ஏன்? எதற்கு?.

Keerthi
2 years ago
ஸ்ரீதரனின் நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லை. கூட்டமைப்புக்குள்ளே விரிசல். ஏன்? எதற்கு?.

13வது திருத்தத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

13வது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாக புனையப்பட்டுள்ள சில விடயங்கள் உள்ளன. மேலும் அதிலே தெளிவாகவும் சொல்லப்படவில்லை. அத்தோடு இது தொடர்பாக எங்களது கூட்டத்தில் ஆராய்ந்திருந்தோம்.

இந்தியாவிடம் நாங்கள் 13ஐ பற்றி கேட்கத்தேவையில்லை. ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி கூட்டுறவு சமஸ்டி வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலின் போது ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்று திமுகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது.

இவ்வளவு நடந்த பின்பும் நாங்கள் அதை கேட்பது காலத்திற்கு பொருத்தமானதா என்று எனக்கு தோன்றவில்லை என தெரிவித்தார்.