நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்
Prathees
2 years ago
பண்டாரவளை, அடம்பிட்டிய, கெரண்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது உயிரிழந்த ஐந்து யுவதிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பதுளை பொது வைத்தியசாலையில் அண்மையில் நடத்தப்பட்ட Pஊசு பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது.
இதன்படிஇ உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலங்களின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை 4 மணிக்கு முன்னர் இடம்பெறவுள்ளன.
இதேவேளைஇ கொரோனா தொற்றுக்குள்ளான யுவதியின் இறுதிக் கிரியைகள் பதுளை மயானத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்குழுவினர் கடந்த 29ஆம் திகதி அடம்பிட்டிய இம்புல்வத்தையில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு அன்று பிற்பகல் கெரண்டி நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளனர்.