ஆடை விவகாரத்தால் அடி வாங்கிய மகளிர் கல்லூரி அதிபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதி.

Keerthi
2 years ago
ஆடை விவகாரத்தால் அடி வாங்கிய மகளிர் கல்லூரி அதிபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதி.

தாக்குதலுக்கு உள்ளனதாக கூறப்படும் திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் இன்றைய தினம் ஆசிரியை ஒருவர் அணிந்து வந்த ஆடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்தது.

இந்த சம்பவத்தின் போது அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியையும் தான் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இப்படியான சம்பவங்கள் இவ்வேளையில் தேவையற்றது என மக்கள் விசமம் தெரிவித்துள்ளனர்.