நாட்டில் செயலூக்கி தடுப்பூசிகளை பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
#Covid Vaccine
#SriLanka
Reha
2 years ago
நாட்டில் செயலூக்கி தடுப்பூசிகளை பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 37 சதவீதமானோர் செயலூக்கி தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொவிட்-19 காரணமாக மரணித்த அனைவரும் செயலூக்கி தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளதவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் 96,264 பேருக்கு பைஃசர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.