பொருளாதார சிக்கலில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் ஆதரவை கோரியுள்ள பசில்!
#SriLanka
#Basil Rajapaksa
Nila
2 years ago
பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் திட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றும் அவர்களிடமிருந்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவுள்ளோம் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.