வாக்குவாதம் முற்றி இராணுவ சிப்பாயான இளம் வயது கணவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி!
Mayoorikka
2 years ago
ஹொரணை - மல் பெரிகம பிரதேசத்தில் மனைவி தனது கணவரைக் கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹொரண காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடும் வாக்குவாதத்திற்குப் பின்னர், மனைவி தனது கணவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் இராணுவ வீரராக கடமையாற்றிய 30 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.