இந்திய கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தவான் மற்றும் கெய்க்வாட் உள்ளடக்கம்

#Covid 19
Prasu
4 years ago
இந்திய கிரிக்கெட்  அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தவான் மற்றும் கெய்க்வாட் உள்ளடக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 6-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. டி20 தொடர் பிப்ரவரி 16-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.  

இந்நிலையில், அகமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், நெட் பவுலர் நவ்தீப் சைனி, பீல்டிங் கோச் திலீப், பாதுகாப்பு அதிகாரி லோகேஷ் உள்பட மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்கள் அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். அதன்பின் 2 முறை கொரோனா நெகட்டிவ் என முடிவு கிடைத்த பிறகே மீண்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்பதால் ஒருநாள் போட்டிகளில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4