பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி

Keerthi
2 years ago
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1.98 கோடியைக் கடந்துள்ளது.
 
அதே சமயம் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.31 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.