எரிபொருள் பாவனையை குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும்.- சிபெட்கோ தலைவர்

#SriLanka #Fuel #prices
எரிபொருள் பாவனையை குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும்.- சிபெட்கோ தலைவர்

எரிபொருள் பாவனையை குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும் ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே மக்கள் தாங்களாகவே எரிபொருள் பாவனையை குறைத்துக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'எரிபொருள் விலையை அதிகரிப்பதன் முக்கிய நோக்கம் நுகர்வு குறைப்பதாகும். ஆனால் கடந்த முறை விலை உயர்வு அந்த நோக்கத்தை எட்டவில்லை. எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நிரந்தர பொறிமுறை நம்மிடம் இல்லை. எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது தானாகவே நடக்க வேண்டும். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க நாம் சட்டம் இயற்றி ஒரு அமைப்பை உருவாக்க முடியாது. மின்சாரத்தைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்லது. இது மறைமுகமாக எரிபொருளையும் சேமிக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4