கொழும்பை தொடர்ந்து யாழ். நகரிலும் நாளை கையெழுத்து வேட்டை!
Prasu
4 years ago
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை புதன்கிழமை கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை கையெழுத்துத் திரட்டப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எ.ஏ. சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இதற்கான நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே