கணவரை கொலை செய்ய வந்த இடத்தில் மனைவி பலி: இனந்தெரியாத நபர்களால் அட்டகாசம்
Mayoorikka
2 years ago
மத்துகமவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்கள் உயிரிழந்த பெண்ணின் கணவரைக் கொலை செய்ய வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவர் வீட்டிலிருந்தபோதிலும், உயிர்த்தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து ஆறு T-56 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளை மத்துகம நீதவான் மேற்கொண்டதுடன் பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.