கொரோனாவுக்கு பாணி தயாரித்த தம்மிக்கவின் சகோதரர் கொரோனா தொற்றால் மரணம்!

Mayoorikka
2 years ago
கொரோனாவுக்கு பாணி தயாரித்த தம்மிக்கவின் சகோதரர் கொரோனா தொற்றால் மரணம்!

கொரோனா தொற்றை தடுப்பதாக தெரிவித்து, உள்நாட்டு ஒளடதம் என்ற பாணியை உற்பத்தி செய்த கேகாலை தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கேகாலை – ஹெட்டிமுல்லை – மாகுர – கனேகொடதென்ன பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபரே கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

 அவரின் இறுதிக் கிரியைகள், கொரோனா சட்ட விதிகளுக்கு அமைய நேற்று இடம்பெற்றது.
அவர் புற்றுநோய்க்காக சிகிச்சைப் பெற்றுவந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.