நாட்டில் மற்றுமொரு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
நாட்டில் மற்றுமொரு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

டெங்கு காய்ச்சலினால், 2022 ஜனவரி மாதம் மட்டும் 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பகுதி அறிவித்துள்ளது. இதில், ஆகக் கூடுதலாக ​கொழும்பு மாவட்டத்தில் 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், ​பொலன்னறுவை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஒருவரேனும் பாதிக்கப்படவில்லை.

பெப்ரவரி மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர். அதிலிருவர் கல்முனையிலும் மற்றைய இருவரும் மட்டக்களப்பிலும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்​படையில், நமது நாட்டில் இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 989 பேர் டெங்கு காய்ச்சலால் இனங்காணப்பட்டுள்ளனர்.