மின்வெட்டு தொடர்பாக பொறியியலாளர்களுக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாடுகள்

#SriLanka #Power #Time
மின்வெட்டு தொடர்பாக பொறியியலாளர்களுக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாடுகள்

மின்வெட்டு தொடர்பாக மின் பொறியியலாளர்களுக்கும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்த போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக தடையில்லா மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.