மேலதிக வகுப்பு நிலையத்தில் மாணவிகளின் கழிவறையில் கமரா: சந்தேகநபர் ஒருவர் கைது
Mayoorikka
2 years ago
கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில் நவீன தொழில்நுட்ப கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக வகுப்பு நிலையத்தின் உரிமையாளர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் குறித்த மேலதிக வகுப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.