இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் - அமெரிக்க தூதுவர் ஜுலி சங்

Reha
2 years ago
இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் - அமெரிக்க தூதுவர்  ஜுலி சங்

இலங்கை அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புக்களுடன் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வத்துடன் உள்ளதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தாம் பெருமை கொள்வதாக, இராஜாங்க செயலாளரிடம் கூறியதாகவும் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், இரு தரப்புகளுக்கிடையே பகிரப்பட்ட மதிப்புகளை ஆராயவும், உறவுகளை பலப்படுத்தவும் ஆவலாக உள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் ஜுலி சங் கூறியுள்ளார்.