கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை

Prathees
2 years ago
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை

தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தினால் பொலிஸ் கான்ஸ்டபிள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கான்ஸ்டபிள் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கசகல பொலிஸ் பதவி ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் சென்றிருந்தார்

இவர் நேற்றிரவு கடையொன்றுக்கு சென்ற போது தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.