ஈஸ்டர் தாக்குதல் தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டு: முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த விடுதலை

Mayoorikka
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் தகவல் கிடைத்தும்  நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டு: முன்னாள் பொலிஸ் மா அதிபர்   பூஜித்த  விடுதலை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (18) உத்தரவிட்டுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் மீது குற்றவியல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. 

நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.