பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் எரிபொருள் இல்லாமல் இயங்குகின்றன
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறுகையில், சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் உரிமையாளர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தனியார் பஸ் தொழிற்சங்கம் மேலும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், இதற்கு தீர்வைக் கோரி எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் பஸ் தொழிற்துறை மற்றும் முச்சக்கர வண்டி தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பின் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.