முதலை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ராஜித விடுத்த கோரிக்கை நீதிமன்றில் இருந்து நீக்கம்

Prathees
2 years ago
முதலை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு ராஜித விடுத்த கோரிக்கை நீதிமன்றில் இருந்து நீக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலை வழக்கை வேறொரு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு குற்றம் சாட்டப்பட்ட ராஜித சேனாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரிபால குணரத்ன இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

எனினும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த நேற்று இதனை நிராகரித்துள்ளார்.

வழக்கை மார்ச் 15ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

10.11.2019 அன்று திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாறுவேடத்தில் இருவர் தெரிவித்த கருத்துக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.