இன்று மின் துண்டிப்பு ஏற்படுமா? ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்ட தகவல்

Mayoorikka
2 years ago
இன்று மின் துண்டிப்பு ஏற்படுமா? ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்ட தகவல்

திட்டமிடப்பட்ட படி இன்றைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருளை இலங்கை மின்சார சபை தற்போது பெற்றுக்கொண்டிருப்பதால், தேசிய மின்கட்டமைப்பை ஸ்திரப்படுத்த பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதிகளில்  அவ்வப்போது மின் தடை ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.