எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கைக்கு வரவுள்ள இரண்டு கப்பல்கள்

Mayoorikka
2 years ago
எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கைக்கு வரவுள்ள இரண்டு கப்பல்கள்

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்குவதற்காக 37,000 மெற்றிடக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளதாக, வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாளைய தினம் 37, 500 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளது.இந்தக் கப்பலுக்கான கொடுப்பனவை செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் தடையின்றி இடம்பெறுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.