மீண்டும் வரமாட்டேன் என நிமல் லான்சா ஜனாதிபதிக்கு கடிதம்
Prathees
2 years ago
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விசேட கடிதமொன்றை தயார் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த கடிதத்தில் அமைச்சர் பதவியை வகித்து தாம் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு என்ன செய்வார் என்பது தெரியவில்லை.
அண்மையில், இ இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது ஊழியர்களுடன் சேர்ந்துஇ தனது அமைச்சக அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட உடமைகளை அகற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அலுவலகத்திற்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை இல்லை என தெரிவித்திருந்தார்.