ஆடம்பர விடுதியை முற்றாக கைப்பற்றிய சீனாவில் இருந்து வந்த குழுவினர்!
#China
#SriLanka
#government
Reha
2 years ago
சீனாவில் இருந்து வந்த குழுவினர் ஒன்று நீர்கொழும்பில் உள்ள பிரபலமான ஹொட்டல் வலையமைப்புக்கு சொந்தமான ஆடம்பர விடுதியை முற்றாக கைப்பற்றியுள்ளதாகவும், அங்கு பணிபுரிந்த சகல ஊழியர்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கு என்ன காரணம் என்பது தெளிவில்லை என்ற போதிலும் அந்த விடுதியில் தற்போது முழுமையாக சீன பிரஜைகளே தங்கி உள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளோ, ஊழியர்களோ அந்த விடுதியில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.