யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்

Mayoorikka
4 years ago
யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட காலமாக தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்று வருவதாகவும், தமக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வருகை தந்து தமது ஆதரவினை தெரிவித்து உள்ளனர். 

dsofice1
dsofice2
dsofice3
dsofice

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4