விசேட அறிவிப்பு : இன்று 2 மணி நேர மின்வெட்டு: சற்று முன்னர் வெளியான தகவல்
Mayoorikka
2 years ago
இன்று மாலை 4.30 முதல் இரவு 10 .30 மணிவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் இரண்டு மணிநேர மின்வெட்டு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாட்டுக்குழு இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளது.
இது தொடர்பான நேர விபரத்தை ஆணைக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.
நாட்டில் இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள சுழற்சி முறையிலான மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.