நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: பசில்

#Basil Rajapaksa
Prathees
4 years ago
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: பசில்

உள்ளுர் கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு துறைகளில் உள்ள பாரிய தொழில் முயற்சியாளர்களுடன் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் தனியார் துறையினரின் பங்களிப்பைக் கோரும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி உருவாக்கம், நிதிக் கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு, முதலீட்டு ஊக்கத்தொகை, ஏற்றுமதி வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாய உற்பத்தி, போதுமான உரம் வழங்கல் மற்றும் சுற்றுலா மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை விவசாயம், தொழில்நுட்ப தோட்டங்கள் மற்றும் பசுமை வீடுகள் உட்பட பல துறைகளில் பாரிய முதலீடுகள் அந்நிய செலாவணியைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பைத் திறக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உள்ளுர் தொழில் முனைவோர் வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, உலகளாவிய தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து அரசாங்கம் தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முற்படுகையில், சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் தவறான எண்ணங்களைத் திருத்தும் திறன் வர்த்தக சமூகத்திற்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட புத்துயிர் காரணமாக சீமெந்துக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் நாட்டில் சீமெந்து உற்பத்தியை முழுமையாக மேற்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4