யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட இளைஞன் 6 மாதங்களின் பின் கைது!

Prathees
2 years ago
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட இளைஞன்  6 மாதங்களின் பின் கைது!

கோப்பாய், யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களில்  ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகியிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர்.