ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக காய் நகர்த்தும் ஐ.தே.க

Mayoorikka
4 years ago
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: மைத்திரிக்கு எதிராக காய் நகர்த்தும் ஐ.தே.க

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வெளிப்படுத்திய தகவல் குறித்து புதிய விசாரணை ஒன்றை நடத்தவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அந்தக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குழுவொன்றின் மூலம் புதிய விசாரணை நடத்தப்படவேண்டும்.

தாக்குதல்கள் இடம்பெற முன்னரே புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருந்த தகவல்களை பாதுகாப்புச் சபையில் தெரிவிப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும் அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

அத்தோடு புலனாய்வுப் பிரிவினர் அறிந்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தகவல்கள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

ஆகவே இவ்வாறு தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நடவடிக்கையை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4