இறந்த தாய்க்கு 14 நாட்களாக உணவு ஊட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட மகள் :கொலையா அல்லது இயற்கை மரணமா?

Prathees
2 years ago
இறந்த தாய்க்கு 14 நாட்களாக உணவு ஊட்டிய மனநலம் பாதிக்கப்பட்ட மகள் :கொலையா அல்லது இயற்கை மரணமா?

கடந்த 14 நாட்களுக்கும் மேலாக வீட்டில் இறந்து கிடந்த தனது தாய்க்கு உணவளித்து வந்த மனநோயால் பாதிக்கப்பட்ட 45 வயதுடைய பெண் ஒருவர் தொடர்பில் மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

நுகேகொட, தெல்கந்த, பகிரிவத்த, சோம தலகல மாவத்தையில் வசிக்கும் வேரபிட்டிய பகுதியைச் சேர்ந்த பத்மினி பத்திரன என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் பிரதேசவாசிகள் நேற்று முன்தினம் (23) மாலை மிரிஹான பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளனர்.

பொலிசார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சாப்பாட்டு அறையில் தாயின் உடல் தரையில் கிடந்துள்ளது

சடலம் மிகவும் உருகிய நிலையில் காணப்பட்டதாகவும்இ வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்இ மனநலம் பாதிக்கப்பட்டுள்ள மகளும் உயிரிழந்த தாய்க்கு அருகில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் திருமணமான சில காலங்களின் பின்  இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக மகள் இறந்த தனது தாயுடன் இரவும் பகலும் கழித்திருக்கலாம் எனபொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகளால் இந்த தாய் கொல்லப்பட்டாரா? அல்லது தாய் இயற்கை எய்தினார்களா? என பல கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரிஹான பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.